H.Raja says complete ban required on such Dravidar outfits and arrests of their leaders for fomenting communal tension
பி.ஜே.பியின் தேசிய்ச்செயலர் எச்.ராஜா அவர்கள் “கோயில் அர்ச்சகர்கள் மீது நடந்ததாக்குதல்,திராவிட இயக்கத்தாரின் தாலி அறுப்பு போராட்டத்தின் மூலம் இந்துத்துவா, திராவிட கோட்பாடு உள்ளவர்களுக்கு இடையே மோதலாக உருவாகி,பெரியார் திராவிடஇயக்கத்தாரால் பிராமண அர்ச்சகர்களின் பூணூல்அறுக்கப்பட்டுள்ளது.இதைப்போன்ற அநாகரீகச் செயலகள் பல ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தலை தூக்கி உள்ளது என்று கூறி உள்ளார்.
ராஜா அவர்கள் மேலும் கூறுகையில் இதைப்போன்று மக்கள் இடையே மத உணர்வுகளையும்,சட்டம்,ஒழுங்கை குலைக்கும் வகையிலும் கலவரத்தை தூண்டிவிடும்
திராவிட அமைப்புகளை தடை செய்து, தூண்டி விடும் அதன் தலைவர்களையும் கைது செய்து அமைதியை நிலை நாட்ட வேண்டும் என்று கூறி உள்ளார். இது தொடர்பாக தமிழக முதல் அமைச்சருக்கும்,அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அவர்களுக்கும் கடிதம் எழுதி உள்ளதாகக் கூறினார்.”
இந்துக்களின் மனத்தை புண்படுத்தும் விதத்தில் தாலி அறுப்பு போராட்டத்தை துவக்கி வைத்த வீரமணிதான்,இந்த பூணூல் அறுப்புக்கும் முக்கிய காரணமாக இருப்பார் என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள். அர்ச்சகரின் பூணூலை அறுத்தவர்களை விட,அவர்களை தூண்டி விட்டவர்கள் யார் என்பதை கண்டறிந்து, நமது தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து அரசியல் சட்டப்படி மக்கள் அனைவரும் அவரவர் மத வழிபாடுகளை தொடர்ந்து செய்ய வழி காட்ட வேண்டும்.
திராவிட இயக்கத்தாரின் கீழ்த்தரமான செயல்களை தட்டிக் கேட்க முன் வந்த திரு ராஜா அவர்களை பாராட்டுவதுடன், இதைப்போன்ற அநாகரீகச் செயல்கள் மீண்டும் தமிழகத்தில் நடைபெறாமல் இருக்க, மத்திய அரசையும் ராஜா அவர்கள் வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
Leave a comment